states

img

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!

மத்தியப் பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

மத்தியப் பிரதேசம், முங்காவல்லி கிராமத்தில் ஜூன் 6-ஆம் தேதி பண்ணை நிலத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை சிருஷ்டி குஷ்வாஹா ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைய மீட்கும் பணி தொடர்ந்து 3-ஆவது நாளாக நடைபெற்று வந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர், குழந்தைக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் வாயு செலுத்தினர்.

இந்நிலையில், குழந்தையை மீட்க குஜராத்திலிருந்து ரோபோடிக் நிபுணர் குழ்வினர் இன்று மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மீட்கப்பட்ட குழந்தை மயக்க நிலையில் இருப்பதாகவும், குழந்தையின் இதயத்துடிப்பு, மூளை ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்பதை மருத்துவர்கள் கவனித்து தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.